ஆண்மை குறைவதற்கு என்ன காரணம்? 
எதனால் இது ஏற்படுகிறது?

ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணமே உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிப்பதுதான். இது குறைந்தால் பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்., ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.

இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும்.

இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான்.

இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. 

கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. 

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் TV மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.


சுய ‪இன்பத்தால் வரும் பிரச்சினைகள்‬.

👉 உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடுங்குதல், கை கால் அயர்ந்து லேசாக நடுங்கும் உடல் எடை குறையும்.

👉 உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும் பயம் நடுக்கம் படப்பிடிப்பு உண்டாகும்.

👉 தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக வைத்துகொள்ளுதல், இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்

👉 ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும் ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத்துவங்கும்

👉 சிறுநீர் கழிக்கும் போதோ விந்து வெளியேற்றும், பெண்களை பார்த்தாலே பயம் வரும்.

👉 அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து. ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.

தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.


செல்போன்களால் ஆபத்து.

செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் ரேடியோ அலைகள் விந்தணுக்களுக்கும், பெண்களின் கருமுட்டைகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், செல்போன் மற்றும் லேப்டாபிற்காக பயன்படுத்தும் வை-பை கூட அதன் அலைக்கற்றைகளால் விந்தணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இதனால் விந்தணுக்கள் எளிதில் இறந்து விடும். அது மட்டுமின்றி டி.என்.ஏ பாதிப்படையும்.


விந்தணுக்கள் குளிர்ச்சியானவை.

நாம் விந்தணுக்கள் சூடானவை என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் விந்தணுக்கள் 7 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வாழக்கூடியவை. டெஸ்டிக்கில்ஸ் விந்தணுக்களை குளுமைப்படுத்தும் ஒரு குளிர்சாதனப்பெட்டி போன்று செயல்படுகிறது. 

இறுக்கமான உடைகளை அணிவதால் வெப்பம் உண்டாகிறது. இதனால் தான் இறுக்கமான உடைகளை தவிர்க வேண்டும் என்று கூறுகிறார்கள்


தீய பழக்கங்களால் அழியும்.

பல்வேறு ஆய்வுகளில், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை விந்தணுக்களின் அளவையும், சக்தியையும் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஆண்மை கூட பறிபோகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.